Thursday, 24 April 2014

வாக்கு!


ஊர்கூடித் தேரிழுத்தல்
ஊருக்கு அழகு!
தேர்தல் எனும் தேர்வு
தேசத்திற்கழகு!


வாக்களித்து
வளைய வந்தவர்களில்
வாகை பெறுபவரை
வாக்களிக்கும் உரிமையுள்ளோர்
வாக்களிப்பால் தெரிவுசெய்வர்!

வாக்களித்த அடையாளம்
வளர்ச்சிக்கு அடையாளம்!

வாக்களிப்பில் களிப்புண்டு!
வளரும் நம் நாட்டின்
வாளிப்பும் அதிலுண்டு!

-பவித்ரா!

Sunday, 13 April 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்து!



அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சித்திரை மாதம்தான்
எத்தனை உயர்ந்த்து பார்!
மணம்வீசும் மலர்கள்பல
மலர்ந்திடுமே இந்நாளில்!

வேப்பம்பூ வாசம்
வீதிஎங்கும் தான் வீசும்!
வண்ணப் பூமரங்கள்
வழியெங்கும் பூச்சொறியும்!

அடுத்து வரும்மழையை
அடைத்திட வழிசெய்ய
நீர்நிலைகள் சீர்பெறவே
நின்றமழை தானுதவும்!

முக்கனிகள் விளைந்திடும்!
முழுநிலவு சுகம்கூட்டும்!
நிழலின் அருமைதனை
எழும்வெயில் உணர்த்திடும்!

நித்திரையில் உழலாமல்
நித்தம் உழைத்திருக்க
வெற்றி எனும் கனியை
விரைந்தளிக்கும் இவ்வாண்டு!

-பவித்ரா

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

Tuesday, 31 December 2013


Wish you all a wonderful new year ahead!!May this year be filled with wonderful memories!!May all sorrows turn into delight,May all tears turn into smiles!! :-) Let fear be replaced with love in all our hearts!! Wish You All A Happy New Year once again!!

Tuesday, 24 December 2013

காற்றாடி!





வங்கக் கடற்கரையில்
வண்ண வண்ணக் காற்றாடி!

காவடி வடிவினிலே
காளையவன் சுமக்கின்றான்!

காற்றடிக்கும் மாலையிலே
காற்றாடி விற்கவந்தான்!

எத்தனையோ சிறுவர்களின்
எண்ணத்தைக் கவருதிங்கே!

அதிர்ஷ்டக் காற்றடித்தால்
அத்தனையும் விற்றுவிடும்!

விற்குமிடம், நேரமும்தான்
வெற்றிபெற அவசியமே!

-பவித்ரா

Wednesday, 18 December 2013

DESERTED- POEM BY PAVISESH


DESERTED!





 




         
Deserted and desperate, now I cry,

Gazing at the full-white on the East sky;

Waning and waxing by the days

Stealing the glow from the sun’s rays;

Covered by dark clouds, unable to peek,

Like the future that I am unable to seek;

I try to coax out melancholies,

From the fiddle that once yielded melodies;

The birds return to their cosy houses;

To feed their young one’s hungry noses;

But my heart cracks right through the middle,

Without a company for my fiddle;

Longing for his return I sing a sad song,

On this full moon night, bright and so long….

Monday, 11 November 2013

DREADFUL FATE!


 
                                                     DREADFUL FATE!

Upon this drenched and dried land,

Worn and tired, here I stand!

Memories echo in me,

On my childhood of glee!

When I used to be so careless and free

When I used to wonder upon what I would be!

And now I stand here,

With my return, so near!

I place my burdens behind me,

And shrink my eyes to clearly see!

A stick in my hand to guide,

I can barely hear him stride!

And  each minute by which he nears,

My heart thumps with little fears!

But I can no more wait

For this is meant to be my fate!

"Are you ready?” asks the Death God,

Alas! I have no option but to nod!



-PAVITHRA SESHADRI

PHOTO COURTESY:GOOGLE

Tuesday, 5 November 2013

படித்ததில் பிடித்தது!

தமிழகம் பற்றிய ஒவ்வொரு தமிழனின் கனவு இது!
=========================================

கட்டிய மனைவியை
கரையில் காக்கவைத்து
கட்டுமரம் ஏறி
கடலுக்குள் சென்றவன்
கட்டுடலில் குண்டு பாயாமல்,
கரை வந்துச் சேர வேண்டும்.

கல் மனங்கள் கரைய வேண்டும் எங்கள்
கல்லணை நிறைய வேண்டும்
கண்ணீர் சிந்தும் கருப்பு வைரங்கள்
கம்பீரமாய் வாழ வேண்டும்.

பள்ளிச் சென்ற மாணவி
பாவிகளிடம் சிக்காமல்
பாவாடை கசங்காமல்
பத்திரமாய் வீடு வந்துச்
சேர வேண்டும்.

வங்கிக் கணக்கில் வற்றாத
வரவு இல்லாவிட்டாலும்
வங்கி அதிகாரிகள் எங்களையும்
வரவேற்று இன்முகத்துடன்
வாய்மொழிய வேண்டும்.

வரிச்சலுகை வழங்கா விட்டாலும்
வணிகக் கடை பெயர் பலகைகளில்
வண்ணமாய் தமிழ் வாழ வேண்டும்.

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு
பால் குடிக்கும் பிள்ளைவாயில்
பகோடாவை திணிக்கும்
தனியார் ஆரம்பப் பள்ளிகள்
தரைமட்டமாக வேண்டும்.

பணம் ஈட்ட பல வழிகள் இருக்க
பல்லாயிரம் உயிர்களை நோகடித்து
பணம் பார்க்கும் டாஸ்மாக் இல்லாத
பண்டிகை வேண்டும்.

ஏமாறும் கூட்டம் இருந்தால்
எளிதில் விற்றுப் போகும்
எதிர்மறை கருத்தும் என்ற
எச்சமான எண்ணமில்லாத
ஊடகங்கள் வேண்டும்.
நன்றி: திரு முகுந்தன் அவர்களின் மின்னஞ்சல்