Saturday 3 October 2015

சக்கரம் சுழலாதோ!



காலச்சக்கரத்தின் வேகச் சுழற்சியிலே

கட்டுண்டு நிற்கிறேன் நானும் இங்கே,

உங்கள் கால்களில் சக்கரம் கட்டிக்

காற்றைக் கிழித்து நீங்கள் செல்கையிலே!

கண்களில் ஏக்கம் சூழ நிற்கிறேன்

களிப்புடன் நீங்கள் சிரிப்பதைக் கண்டு!

காலம் மாறவே, காட்சி மாறவே,

காத்து நிற்கிறேன் கண்ணீருடன்...

கவலைகள் காற்றிலே கலக்காதோவென்

காதில் ஒலிக்கும் இம்மணிச்சத்தம் போல்?



சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய 'On The Wheels Of Life' என்ற கவிதையின் தமிழாக்கம் இது! படித்துவிட்டு தங்களின் கருத்துக்ளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.