Monday, 11 November 2013

DREADFUL FATE!


 
                                                     DREADFUL FATE!

Upon this drenched and dried land,

Worn and tired, here I stand!

Memories echo in me,

On my childhood of glee!

When I used to be so careless and free

When I used to wonder upon what I would be!

And now I stand here,

With my return, so near!

I place my burdens behind me,

And shrink my eyes to clearly see!

A stick in my hand to guide,

I can barely hear him stride!

And  each minute by which he nears,

My heart thumps with little fears!

But I can no more wait

For this is meant to be my fate!

"Are you ready?” asks the Death God,

Alas! I have no option but to nod!



-PAVITHRA SESHADRI

PHOTO COURTESY:GOOGLE

Tuesday, 5 November 2013

படித்ததில் பிடித்தது!

தமிழகம் பற்றிய ஒவ்வொரு தமிழனின் கனவு இது!
=========================================

கட்டிய மனைவியை
கரையில் காக்கவைத்து
கட்டுமரம் ஏறி
கடலுக்குள் சென்றவன்
கட்டுடலில் குண்டு பாயாமல்,
கரை வந்துச் சேர வேண்டும்.

கல் மனங்கள் கரைய வேண்டும் எங்கள்
கல்லணை நிறைய வேண்டும்
கண்ணீர் சிந்தும் கருப்பு வைரங்கள்
கம்பீரமாய் வாழ வேண்டும்.

பள்ளிச் சென்ற மாணவி
பாவிகளிடம் சிக்காமல்
பாவாடை கசங்காமல்
பத்திரமாய் வீடு வந்துச்
சேர வேண்டும்.

வங்கிக் கணக்கில் வற்றாத
வரவு இல்லாவிட்டாலும்
வங்கி அதிகாரிகள் எங்களையும்
வரவேற்று இன்முகத்துடன்
வாய்மொழிய வேண்டும்.

வரிச்சலுகை வழங்கா விட்டாலும்
வணிகக் கடை பெயர் பலகைகளில்
வண்ணமாய் தமிழ் வாழ வேண்டும்.

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு
பால் குடிக்கும் பிள்ளைவாயில்
பகோடாவை திணிக்கும்
தனியார் ஆரம்பப் பள்ளிகள்
தரைமட்டமாக வேண்டும்.

பணம் ஈட்ட பல வழிகள் இருக்க
பல்லாயிரம் உயிர்களை நோகடித்து
பணம் பார்க்கும் டாஸ்மாக் இல்லாத
பண்டிகை வேண்டும்.

ஏமாறும் கூட்டம் இருந்தால்
எளிதில் விற்றுப் போகும்
எதிர்மறை கருத்தும் என்ற
எச்சமான எண்ணமில்லாத
ஊடகங்கள் வேண்டும்.
நன்றி: திரு முகுந்தன் அவர்களின் மின்னஞ்சல்

Wednesday, 23 October 2013


            ON THE WHEELS OF LIFE   

                                                                                                                                             
THE WHEELS OF LIFE SET ME TO PLAY,
I STRAIN MY EYES FINDING A WAY;
WHILE YOU ENJOY WITH YOUR PLAY MATE,
I STAND HERE CURSING MY FATE;
LONGING TO JOIN IN YOUR FUN,
AWAITING HOPEFUL RAYS FROM THE SUN;

SOMEDAY YOU MIGHT GLOW WITH FAME,
AND ALL PEOPLE MIGHT KNOW YOUR NAME;
BUT I MAY STAND HERE OLD AND WORN,
WITH DREAMS SHATTERED AND HEART TORN;

SIGHING,I MOVE ON TO SELL,
CALLING PEOPLE,RINGING MY BELL;
THE SOUND ECHOS TEARS OF SORROW,
WHICH LONG FOR A BETTER TOMORROW!
                                               -POEM BY PAVITHRA SESHADRI
IMAGE COURTESY:GOOGLE

Saturday, 19 October 2013

ஒளி காட்டும் வழி!


              


ஒளி காட்டும் வழி!

குட்டிடும்போதெல்லாம்  ‘பட்’டெனப்  பொறியுடனே
பதிக்கிறதே தன்னெதிர்ப்பை பொட்டுப் பட்டாசு!

ஒருமுகப்படுத்தி  உன் திறமை வெளிப்படுத்த
உயர்வது உறுதியென உணர்த்தியது கலசஒளி!

தரையில் சுழன்று தனைச்சுற்றி ஒளிபரப்பி
உடலுழைப்பின் அவசியத்தை உணர்த்தியது சக்கரம்!

தன்னுடல் தீய்ந்தாலும் புன்முறுவல் ஒளிசிந்தி
தன்னலம் பாராமை தனையுரைத்தது மத்தாப்பு!

ஒற்றுமையைக் குலைத்திடவே பற்ற வைப்பவரை
வெடித்து ஒளிகாட்டி விரட்டின சரவெடிகள்!

நற்றிறம் போதாது ‘நா’காத்தல் வேண்டுமென
வெடிக்காமல் ஒளிசிந்தி  வீழ்ந்ததொரு பட்டாசு!

சேரா இடம் சேர்ந்து சீரழிந்த பின்னாலே
சுட்டபின்பு பொறிதட்ட  கருகிடும் சுருள்கேப்பு!

தடைகளைத் தகர்த்தெறிந்து தாமுயர்ந்தோர் தனைப்பார்த்து
உலகம் வியக்குமென  
வண்ண ஒளியிறைத்து வாழ்த்தியது வாணவெடி!

பட்டாசின் வெடிஒளியும் பலவழிகள் காட்டுமென
இட்ட கவிதை இது! ஏற்றிடுவீர் நடுவர்களே!



-பவித்ரா


பட உதவி: கூகிளுக்கு நன்றி!



ரூபன் அவர்களின் கவிதைப் போட்டிக்கான கவிதை!