Sunday 13 April 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்து!



அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சித்திரை மாதம்தான்
எத்தனை உயர்ந்த்து பார்!
மணம்வீசும் மலர்கள்பல
மலர்ந்திடுமே இந்நாளில்!

வேப்பம்பூ வாசம்
வீதிஎங்கும் தான் வீசும்!
வண்ணப் பூமரங்கள்
வழியெங்கும் பூச்சொறியும்!

அடுத்து வரும்மழையை
அடைத்திட வழிசெய்ய
நீர்நிலைகள் சீர்பெறவே
நின்றமழை தானுதவும்!

முக்கனிகள் விளைந்திடும்!
முழுநிலவு சுகம்கூட்டும்!
நிழலின் அருமைதனை
எழும்வெயில் உணர்த்திடும்!

நித்திரையில் உழலாமல்
நித்தம் உழைத்திருக்க
வெற்றி எனும் கனியை
விரைந்தளிக்கும் இவ்வாண்டு!

-பவித்ரா

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

21 comments:

  1. தமிழ்மணம் வீசும் பதிவுகள் பல இவ்வாண்டில் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு நன்றி!

      Delete
  2. நலம்பல பெருகி வளம்கொழிக்கும் புத்தாண்டாய் அமைய வாழ்த்துக்கள்! வாழிநீடு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு நன்றி தாத்தா!

      Delete
  3. வணக்கம்

    தித்திக்கும் சித்திரைப் புத்தாண்டில்...அருமையான கவி தந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  4. இருளில் ஒளி போல் கவிதை வரிகள்
    பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. புத்தாணிடில் பல புதிய நலன்கள் கிடக்கட்டும்.. நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அழகான வரிகள். தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. வெற்றிக்கனியை விரைந்தளிக்கும் இவ்வாண்டு... சிறப்பு வாழ்த்துக்கள் பா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திர்ௐஉ மிக்க நன்றி!

      Delete
  9. தித்திக்கும் சித்திரைத் திருநாள் மேலும் பல நல்ல வெற்றிகளை தந்திடட்டும்.....

    ஜய வருட வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  10. அன்பின் பவித்ரா - இனிய தாமதமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

      Delete